அன்று 25.8.10 ரஜினி இல்ல திருமன விழா அழைப்பிதலை எழுச்சி தமிழரிடம் வழங்கினார்.
மண்டல சிறப்பு செயற்குழு,திருவல்லூர்,மைய சென்னை,தென் சென்னை,வட சென்னை.
23.8.10 மண்டல சிறப்பு செயற்குழு,திருவல்லூர்,மைய சென்னை,தென் சென்னை,வட சென்னை.
மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் வேலூர், கிரிஷ்ணகிரி, சேலம் மவட்டஙல்
அன்று 22.8.10 மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் வேலூர், கிரிஷ்ணகிரி, சேலம் மவட்டஙல்
எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள்
17.8.10- அன்று எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள்

















30.07.2010 திரு.தொல்காப்பியரின் படத்திறப்பு-புகழஞ்சலி
எழுச்சித்தமிழரின் தந்தை தொல்காப்பியரின் படத்திறப்பு-புகழஞ்சலி 30.07.2010 அன்று வெள்ளிகிழமை மாலை 6 மணிக்கு அங்கனூரில் நடந்தது


















.



21.07.2010 வைகோ அவர்கள் ச.தொல்காப்பியன் அவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
21.07.2010 இன்று இரவு மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தாய்மண் அழுவலகத்தில் எழுச்சித்தமிழரின் தந்தை ச.தொல்காப்பியன் அவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் .
21.07.2010 இன்று காலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி.தங்கபாலு காங்கிரஸ் சட்டமன்ற கொறடா பீட்டர் அல்போன்ஸ் கோவை தங்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.பாண்டியராஜன் அவர்களும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தாய்மண் அழுவலகத்தில் எழுச்சித்தமிழரின் தந்தை ச.தொல்காப்பியன் அவர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர் .



எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் தந்தை திரு.தொல்காப்பியர் அவர்கள்இயற்கை எய்தினார்
15.7.10 இரவு 9:00 – அளவில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் தந்தை திரு.தொல்காப்பியர்
அவர்கள் இயற்கை எய்தினார். முக்கிய அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி





















































பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்
15.7.10 அன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் எழுச்சி தமிழர்
தொல்.திருமாவளவன அவர்கள் மாலை அணிவித்தார்.







பெருந்தலைவர் காமரஜர் பிறந்தநாள
எழச்சி தமிழர் தொல் திருமாவளவன் மாலை அனிவித்தார் உடன் கலைக்கோட்டுதயம் வன்னி அரசு




இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தவிடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
12-7-2010 இலங்கையில் ஐ.நா. தூதரகம் இழுத்து மூடல்
தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்த வியுறுத்தவிடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
12-7-2010இலங்கையில் ஐ.நா. தூதரகம் இழுத்து மூடல்
தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
இலங்கைத் தூதரகத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
-
மாவீரன் ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள்
07.07.2010 மாவீரன் ரெட்டமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, சென்னை ஓட்டேரியில் அமைந்துள்ள அவரது நினைவிடமன உரிமைக் களத்தில் எழுச்சி தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் என்றும் 150 ஆண்டுகளுக்கு முன்னர் தலித் சமூகத்தினருக்கு இருந்த அடக்கு முறைகளையும் ஒடுக்கு முறகளையும் மீறி தலை நிமிர்ந்து வாழ்ந்தவர் என்ற பெருமை பெற்றவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன், தமிழகத்தில் சாதி ஒழிப்பின் முதன்மைப்போராளியாக திகழ்ந்தவர் என்றும் பேசினார்.
சன்பீம் பள்ளியில் டாக்டர் அம்பத்கர நினைவு கட்டிட்ம் திரப்பு டாக்டர் தொல்.திருமா இலவசக்கல்வித் திட்டத் த்துவக்கவிழா
3-7-2010 சன்பீம் பள்ளியில் டாக்டர் அம்பத்கர நினைவு கட்டிட்ம் திரப்பு டாக்டர் தொல்.திருமா இலவசக்கல்வித் திட்டத் த்துவக்கவிழாவில் எழுச்சிதமிழர் கலந்து கொண்டார
மேலவளவ நினைவு நாள்
30-6-2010 இனப் படுகொலைக்கு இணையான மதுரை – மேலவளவுப் படுகொலை நாட்டையே உலுக்கிய நிகழ் வாகும். சமூக நடைமுறைகளைச் சாதாரணமாகக் கவனித்து வரும் எவரும்,மேலவளவுப் படுகொலை யின் பின்னணியைப் புரிந்து கொண்டிருப்பர். நீண்ட காலமாகத் தாங்கள் அனுபவித்து வந்த மேலவளவுப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், சாதி வெறியுணர்வடைந்த மேல வளவு கள்ளர்கள், 30.6.1997 அன்று பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகளை சென்னகரம்பட்டிப் படுகொலை “பாணி”யிலேயே பயணம் செய்த பேருந்தை வழிமறித்து, வெட்டிப் படுகொலை செய்தனர். முருகேசனை பேருந்திற் குள்ளேயே வைத்து தலை வேறு உடல் வேறாக வெட்டிப் படுகொலை செய்தனர். தலையை எடுத்துக் கொண்டு போய் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து இரண்டு “பர்லாங்” தொலைவிலிருந்த கிணற்றில் வீசினார்கள். கள்ளர் சாதி படுகொலை யாளர்கள். நாட்டில் உள்ள அனைத்து சமூக நலச் சிந்தனையாளர்கள் பேரதிர்ச்சியில் உறைந்தனர். மேலவளவு கிராமத்தில் வசித்த வந்த அத்தனை தலித் மக்கள் கொலை பீதியில் ஊரைவிட்டே வெளியேறினர்.
உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு – கோவை-2010
25-6-2010 உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு – கோவை-2010 சிறப்புக் கருத்தரங்கம் ’எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ தலைமை:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் சிறப்புரை தொல்.திருமாவளவன் உரையாற்றினார்

மாவீரன் ஆ.பாண்டியனுக்கு நினைவு அஞ்சலி.
அன்று 18.6.2010 மாவீரன் ஆ.பாண்டியனுக்கு நினைவு அஞ்சலி.
\
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரியலுர் பெரம்பலுர் மாவட்டத்தில் தமிழக அரசு வண்ணத்தொலைக்காட்சி வழங்கும் விழா.
16.6.2010 அன்று சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரியலுர் பெரம்பலுர் மாவட்டத்தில் தமிழக அரசு வண்ணத்தொலைக்காட்சி வழங்கும் விழா.
எழுச்சித் தமிழர் அவர்களுடன் வழக்குரைஞர்கள் சந்திப்பு
19.6.2010 அன்று ஒய்.எம்.சி.எ அரங்கத்தில் எழுச்சித் தமிழர் அவர்களுடன் வழக்குரைஞர்கள் சந்திப்பு.

title="DSC_6406" width="1200" height="800" class="aligncenter size-full wp-image-1858" />

.
சிங்கல இனவெறியன் ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 1000 கனக்கான விடுதலைச் சிறுத்தைகள் எழுச்சித் தமிழர் தலமையில் கைது
8.6.2010 சென்னை மெமொரியல் அருகில் சிங்கல இனவெறியன் ராஜபக்சே இந்தியா வருவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 1000 கனக்கான விடுதலைச் சிறுத்தைகள் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலமையில் கைது.
விடுதலை சிறுத்தை கட்சி தீவிர உறுப்பினர் சேர்க்கை 2010
29.5.2010 அன்று எழுச்சி தமிழர் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தீவிர உறுப்பினர் சேர்க்கை 2010 தலைமை ஆய்வு நடைப்பெற்றது அனைத்து மாவட்ட செயளாலர்கள், மேலிட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

























ஆர்.எம்.வி. இல்லத் திருமன விழாவில் எழுச்சித்தமிழர் வாழ்த்து தெரிவித்தார்
27.5.2010 அன்று ஆர்.எம்.வி. இல்லத் திருமன விழாவில் எழுச்சித்தமிழர் வாழ்த்து தெரிவித்தார்.


















மின்சார படத்தின் வசனம் வாசிக்கும் பொழுது எடுத்த புகைப்படங்கள்
22.5.2010 அன்று மின்சார படத்தின் வசனம் வாசிக்கும் பொழுது எடுத்த புகைப்படங்கள்.







வசந்தகுமார் இல்ல திருமன விழாவில் எழுச்சித்தமிழர் வாழ்த்து தெரிவித்தார்
20.5.2010 அன்று வசந்தகுமார் இல்ல திருமன விழாவில் எழுச்சித்தமிழர் வாழ்த்து தெரிவித்தார்.



எழுச்சித் தமிழருடன் இசைஅமைப்பாளர் சங்கர் கனேஷ் சந்திப்பு
19.5.2010 அன்று எழுச்சித் தமிழருடன் இசைஅமைப்பாளர் சங்கர் கனேஷ் சந்திப்பு










விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் கரும்புலிமுத்துக்குமார் பாசறை துவக்க விழா
18-5-2010 அன்று மாலை 5 மணியளவில் சேப்பாக்கம் அண்ணாஅரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் கரும்புலிமுத்துக்குமார் பாசறை துவக்க விழா நடைப்பெற்றது இதை எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.



























சிறுதாவூர் நிலம்:நீதியரசர் சிவசுப்பிரமணியம் ஆணையத்தின் அறிக்கையை வரவேற்கிறோம் தொல்.திருமாவளவன் அறிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள சிறுதாவூர் என்னும் ஊரிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் வசித்துவரும் ஏழை-எளிய தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் உழுவதற்கு நிலமும் குடியிருப்பதற்கு வீட்டு மனையும் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. அந்நிலங்களை உழுது பயிர் செய்வதற்கு ஏற்ற வகையில், கலப்பை மற்றும் மாடுகள் வாங்குவதற்கும் நிதி உதவி செய்யப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் தாழ்த்தப்பட்டோரைத் தவிர வேறு எவரும் விலைக்கு வாங்கக்கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சிறுதாவூரில் கட்டியுள்ள அரண்மனை தொடர்பாக பெரும் விவாதம் எழுந்தது. அதனையொட்டி பல்வேறு அமைப்புகளாலும் அரசியல் கட்சியினராலும் அடுக்கடுக்கான போராட்டங்கள் நடத்தப்பட்டன.
நிலங்களுக்குரிய தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திட்டமிட்ட மோசடிக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தலித் அமைப்புகள், இடதுசாரிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகள் போன்ற பல்வேறு தரப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததோடு தலித் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இவற்றின் விளைவாக, தமிழக அரசு, நீதியரசர் சிவசுப்ரமணியம் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம் தீவிரமாக இயங்கி, தொடர்புடைய தனி நபர்களையும் நிறுவனங்களையும் விசாரித்தது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஓர் நீண்ட நெடிய அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை 13.5.2010 அன்று சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கையின்படி, செல்வி ஜெயலலிதா அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் யாவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடம் இருந்து சட்டவிரோதமாக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.
மேலும், அந்நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில் கையகப்படுத்தப்படும் அந்த நிலங்களை விற்பனை செய்த தாழ்த்தப்பட்டோருக்கே திருப்பி வழங்கக்கூடாது எனவும் பிற தாழ்த்தப்பட்ட மக்களுக்கே வழங்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஆணையத்தின் இந்தப் பரிந்துரைகளை விடுதலைச்சிறுத்தைகள் வரவேற்கிறது. அத்துடன் தமிழகமெங்கிலும் இவ்வாறு தாழ்த்தப்பட்டோருக்கான நிலங்களை, குறிப்பாக, பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து அவற்றை மீட்டு உரிய மக்களிடம் ஒப்படை செய்வதற்கு தமிழக அரசு தனி விசாரணை ஆணையம் ஒன்றை உடனடியாக அமைத்திட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும், மதுரை வண்டியூர் தீர்த்தக்காடு அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென, வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டுமென தமிழக அரசை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
(தொல்.திருமாவளவன்)
2011 இலக்கை நோக்கி நிர்வாகிகளுக்கான் ஆளுமை புத்தாக்கப் பயிலரங்கம்
இடம்:விஜய் பார்க் ஹோட்டல்,அனிதா அரங்கம்,சென்னை
நாள் 12.02.10 நேரம் காலை 10.00 மாலை 6.30 மணிவரை
வரவேற்புரை:முகமது யூசப்
பயிலரங்க அறிமுகவுரை:ஞான.திலகர்
நிறைவுரை:எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்
நன்றியுரை:உஞ்சைஅரசன்
சட்டமேதை பாபாசாகிப் டாக்டர் அவர்களின் 120-வது பிறந்தநாள் விழா.
சட்டமேதை பாபாசாகிப் டாக்டர் அவர்களின் 120-வது பிறந்தநாள் விழா.
நாள்:11-05-2010 செவ்வாய்கிழமை நேரம்:மாலை4.00 மணி
இடம்:பல்தட ஓலிப்பதிவு அரங்கம், அகில இந்திய வானொலி,
காமராசார் சாலை, சென்னை-4
தலைமை:கி.சீனிவாசராகவன்
சிறப்புவிருந்தினர்:தொல்.திருமாவளவன்
வாழ்த்துரை:இரா.வரதராஜன்,வை.பழனிச்சாமி,இரா.பாலசுப்பிரமணியன்
மும்பெரும்விழா,திருவள்ளுவர் தின விழா,தொல்.திருமாவளவன் M.P.க்கு பாராட்டு விழா,விருதுகள் வழங்கும் விழா
மும்பெரும்விழா,திருவள்ளுவர் தின விழா,தொல்.திருமாவளவன் M.P.க்கு பாராட்டு விழா,விருதுகள் வழங்கும் விழா
திருவள்ளுவர்-லயன்.டாக்டர்.மோதிலால்
பெரியார்-ஆருர் தமிழ்நாடன்
அம்பேத்கர்-நெய்வேலி சுப்ரமணியன்
அயோத்திதாசர்-மும்மை அண்ணாமலை
கலைஞர்-கவிஞர் பிறைசூடன்
திருமா-ஆராய்ச்சியாளர் டாக்டார்.விஜயகுமார்
தமிழ்ஒளி-துபாய் ஏழுமலை
கவி.தஞ்சை ராமையா தாஸ்-ஒளிப்பதிவாளர்
விருதுகள் வழங்கும் விழா எழுச்சித்தமிழர்தொல்.திருமாவளவன் தலைமையில் நடைப்பெற்றது
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம்
ஏப்ரல்30 விழுப்புரம் மாவட்டம் சார்ப்பாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் எழுச்சித்தமிழர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
கோயம்பேட்டில் பஸ் மறியல்
ஏப்ரல்29 மன்னார்குடி அருகே சென்றிருந்த எழுச்சித்தமிழரின் கார் தாக்க பட்டத்தைக்கண்டித்து கோயம்பேடு பஸ் நிலையம் அருகே தென்சென்னைமாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் சாலை மறியலில் ஈடுப்பட்டனார்.சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை போலிஸார் கைது செய்த்தனார்.
மன்னார்குடி அருகே பரபரப்பு-திருமாவளவன் கார் மீது கல்வீச்சு ஒருவர் படுகாயம்
ஏப்ரல்29 விடுதலைச்சிறுத்தைகள்கட்சித்தலைவர் எழுச்சித்தமிழர்தொல்.திருமாவளவன் சென்ற கார் மீது மன்னார்குடி அருகே ஒரு கும்பல் கல்வீசி தாக்கியது.இதில் ஒருவர் காயமடைந்தார்.
மன்னார்குடியில் ஆதிதிராவிடர் சமூக நல அபி விருத்தி சங்கம் சார்பில் அம்பேத்கர் அறிவாலயம் மற்றும் சிலை திறப்புவிழா நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சிக்கு செல்லும் போது பரவாக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே இருட்டில் மறைந்திருந்த மர்ம கும்பல்,திருமாவளவன் மற்றும் கட்சியினர் சென்ற கார்கள் மீது கற்களை வீசி தாக்கியது.
சிகிச்சைக்காக தமிழகம் வந்த அன்னை பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 16-4-2010 இரவு மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் அவரை இறங்க அனுமதிக்காமல் தடுத்து, அதே விமானத்தில் மலேசியாவிற்கு மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டனர். இந்திய குடிவரவைச் சார்ந்த அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொண்டதற்கு, கடந்த 2003ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கைச் சுற்றறிக்கையே காரணம் என்பது தெரியவருகிறது.
அதாவது 1980க்குப் பின்னர் தமிழகத்திற்கு வந்த மேதகு பிரபாகரன் அவர்களின் பெற்றோர் 2003ஆம் ஆண்டு வரையில் திருச்சிராப்பள்ளியிலேயே தங்கியிருந்தனர். 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து பலரும் ஈழத்திற்குத் திரும்பினர். அதே போலமேதகு பிரபாகரன் அவர்களது பெற்றோரும் 2003ஆம் ஆண்டு தமது தாயகத்திற்குத் திரும்பினர். அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் தமிழகத்திற்கு வர தடை விதிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருக்கிறார். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையிலேதான் அவர்கள் தமிழகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அந்தத் தடையின் அடிப்படையில்தான் அதிகாரிகள் அன்னை பார்வதி அம்மாள் அவர்களை சென்னையில் இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிய வருகிறது. அதாவது, பார்வதி அம்மாள் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கு அன்றைய அதிமுக அரசு பெற்ற தடையாணைதான் காரணம் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.
எனினும், அதனைக் காரணம் காட்டி அவரை இங்கு மருத்துவம் பெறவிடாமல் திருப்பி அனுப்பிய நடவடிக்கையானது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். இந்நிலையில் இந்திய அரசின் அனுமதி மறுப்புப் பட்டியலிலிருந்து அன்னை பார்வதி அம்மாள் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழகத்திற்கு அவரை அழைத்து வரவேண்டும் எனவும் தமிழக அரசை வற்ப்புறுத்தி 21.4.2010 அன்று ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித்தமிழர் அவர்கள் கன்டன உரையாற்றினார்.
சிகிச்சைக்காக தமிழகம் வந்த அன்னை பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த 16-4-2010 இரவு மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் அவரை இறங்க அனுமதிக்காமல் தடுத்து, அதே விமானத்தில் மலேசியாவிற்கு மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டனர். இந்திய குடிவரவைச் சார்ந்த அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொண்டதற்கு, கடந்த 2003ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட எச்சரிக்கைச் சுற்றறிக்கையே காரணம் என்பது தெரியவருகிறது.
அதாவது 1980க்குப் பின்னர் தமிழகத்திற்கு வந்த மேதகு பிரபாகரன் அவர்களின் பெற்றோர் 2003ஆம் ஆண்டு வரையில் திருச்சிராப்பள்ளியிலேயே தங்கியிருந்தனர். 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து பலரும் ஈழத்திற்குத் திரும்பினர். அதே போலமேதகு பிரபாகரன் அவர்களது பெற்றோரும் 2003ஆம் ஆண்டு தமது தாயகத்திற்குத் திரும்பினர். அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா, பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் தமிழகத்திற்கு வர தடை விதிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருக்கிறார். அந்த விண்ணப்பத்தின் அடிப்படையிலேதான் அவர்கள் தமிழகத்திற்கு வர தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அந்தத் தடையின் அடிப்படையில்தான் அதிகாரிகள் அன்னை பார்வதி அம்மாள் அவர்களை சென்னையில் இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிய வருகிறது. அதாவது, பார்வதி அம்மாள் அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கு அன்றைய அதிமுக அரசு பெற்ற தடையாணைதான் காரணம் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.
எனினும், அதனைக் காரணம் காட்டி அவரை இங்கு மருத்துவம் பெறவிடாமல் திருப்பி அனுப்பிய நடவடிக்கையானது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். இந்நிலையில் இந்திய அரசின் அனுமதி மறுப்புப் பட்டியலிலிருந்து அன்னை பார்வதி அம்மாள் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழகத்திற்கு அவரை அழைத்து வரவேண்டும் எனவும் தமிழக அரசை வற்புறுத்துகிறோம்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 21-04-2010 அன்று காலை 10 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சென்னையில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவண்
(தொல். திருமாவளவன்)
`மண்ணும் சிவந்தது` குறும்படம் வெளியீட்டு விழா
16.4.10 அன்று மாலை 4 மணியளவில் `மண்ணும் சிவந்தது` குறும்படம் வெளியீட்டு விழா நடைப்பெற்றது இந்நிகழ்ச்சியில் எழுச்சித்தமிழர்தொல்.திருமாவளவன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
மறைமலை நகரை குலுக்கிய சிறுத்தைககளின் விருதுகள் வழங்கும் விழா
14.4.10 அன்று மாலை 6மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் புரட்சியாளர் அம்பேத்கார் பிறந்தநாளில் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.இதை எழுச்சித்தமிழர்தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி சான்றோர்களுக்கு விருதுகளை வழங்கினார் மாண்புமிகு முதல்வர் தலைவர் கலைஞர்-(அம்பேத்கர் சுடர்)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி-(பெரியாள் ஒளி)
திருமதி.கிருக்ஷ்ணம்மாள் ஜெகநாதந்-(காமராசர் கதிர்)
கவிக்கோஅப்துல்ரகுமாந்-(காயிதே மில்லத் பிறை)
திருமிகு.ஞான அலாய்சியஸ்-(அயோத்திதாசர் ஆதவன்)
ஆகியோர்களுக்கு விருதுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியை காஞ்சி மாவட்டச்செயலாளர் சூ.க.விடுதலைசெழியன் தலைமை தாங்கினார்.கேது.தென்னவன் நன்றியுரை ஆற்றினார்.
அம்பேத்கார் சிலைக்கு எழுச்சித்தமிழர் மாலை அணிவித்தார்
14.4.10 அன்று அம்பேத்காரின் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா முன்னிட்டு கோயம்பேடு மற்றும் அசோக்நகரில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு எழுச்சித்தமிழர்தொல்.திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஏப்ரல் 4 இந்திய தொழிலாளர் உரிமைநாள் முன்னிட்டு கருத்தரங்கம்
4.4.2010 ஞாயிறு காலை10மணியளவில் தனலட்சுமி திருமண மண்டபம் வேலப்பன் சாவடி திருவேற்காட்டில் ஏப்ரல் 4 இந்திய தொழிலாளர் உரிமைநாள் முன்னிட்டு கருத்தரங்கம் மற்றும் தொழிலாளர் உரிமை மாநாடு பொது கூட்டம் நடைப்பெற்றது.இதில் எழுச்சித்தமிழர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியை முனைவர்சு.மாகதேவன் தலைமை தாங்கினார்.
காகிதமில்லத் அவர்களுக்கு எழுச்சித்தமிழர் மலர் வலையம் வைத்தார்
இசுலாமிய சனநாயகப் பேரவையின் தொடக்க விழாவை முன்னிட்டு கண்ணியத்தலைவர் காகிதமில்லத் அவர்களுக்கு எழுச்சித்தமிழர் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் உடன் கட்சியின் மாநில பொருளார் முகமதுயுசுப் மற்றும் எரளமான இசுலாமிய தோளர்கள் உடன் இருந்தனார்.
பெரம்பலுர் மாவட்டத்தில் வண்ணத்தொலைக்காட்சி வழங்கும் விழா
20.3.10 அன்று பெரம்பலுர் மாவட்டத்தில் வண்ணத்தொலைக்காட்சி வழங்கப்பட்டது இதில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு வண்ணத்தொலைக்காட்சி வழ்ங்கிச்சிறப்புரையாற்றினார்.இதில் மாவட்டச்செயலாளர் கிட்டு கலந்துக்கொண்டார்.
பெரம்பலுர் மாவட்டத்தில் கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தை எழுச்சித்தமிழர் வழங்கினார்
20.3.10 அன்று பெரம்பலுர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கலைஞரின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடுத்திட்ட சுகதார திருவிழா நடைப்பெற்றது.இதில் எழுச்சித்தமிழர்தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு மக்களுக்கு அத்திட்டத்தை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.இதில் மாவட்டச்செயலாளர் கிட்டு கலந்து கொண்டார்.
இந்தியா டுடே மார்ச் மாத சிறப்பிதழில் பலம் மிக்கவர்கள் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களின் பட்டியல் 2010

இந்தியா டுடே இதழ் ஆண்டுக்கு ஒருமுறை இந்தியாவின் பலம் மிக்கவர்கள் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களின் பட்டியல் வெளியிட்டு வருகிறது. 2010 ம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் அதிகாரமுள்ள ஐவர் என்ற தலைப்பில் பட்டியல் வெளியிட்டுள்ளது.
(1) முதலிடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் சமத்துவப்பெரியார் டாக்டர் கலைஞர் அவர்கள், (தி.மு.க)
(2) இரண்டாம் இடத்தில் மாண்புமிகு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், (தி.மு.க)
(3) மூன்றாம் இடத்தில் செல்வி ஜெயலலிதா அவர்கள், (அ.இ.அ.தி.மு.க)
(4) நான்காம் இடத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள், (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி),
(5) ஐந்தாம் இடத்தில் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், (சட்டமன்ற கொறடா – காங்கிரஸ்)
இம்முறை பட்டியலில் இடம் பெறாதவர்கள்
கடந்த ஆண்டு
ச.ராமதாஸ் அவர்கள் (மூன்றாவது இடம்) பா.ம.க,
கடந்த ஆண்டு தா.பாண்டியன் அவர்கள் (ஐந்தாம் இடம்) சி.பி.ஐ.
துணிந்த வியுகவாதி
என்ற தலைப்பில் எழுச்சித்தமிழர் அவர்களை பற்றி இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது.
ஏனெனில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், அக்கட்சி வெறுக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வெளிப்படையாக ஆதரவளித்தவர். பிரபாகரனின் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஒரே தமிழக அரசியல்வாதி.
ஏனெனில் சிறுபான்மையினர் உரிமைக்கான ஜெனிவா சர்வதேச மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்துகொண்டவர்.
ஏனெனில் சகோதரராக கருதிய பா.ம.க தலைவர் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்குத்தாவியபோது தொடர்ந்து தி.மு.கவுடனேயே நீடிக்கும் தெளிவான அரசியல்வாதி.
சமீபத்திய வௌயீடு
தனது பேச்சுக்களையும், எழுத்துக்களையும் தொகுத்து 25 புத்தகமாக வெயிட்டுள்ளார்.
புதுமைப்போராட்டம்
முதல் முறையாக கிறிஸ்தவ தேவலாயத்தில் ஒரு மசூதியிலும் நுழைவுப்போராட்டம் செய்தார்.
மறந்துவிட்டது
இனி திருமணத்திற்கு காலம் கடந்து விட்டதாக கருதுகிறார்.
பிடித்தவை
இளையராசாவின் பாடல்கள்,
காய்கறி சாலட்டும்,
பொங்கலும்.
1000 கல்லுரி மாணவர்கள் தங்களை சிறுத்தைகளாய் இணைத்துக்கொண்டனர்
14.3.10 மாலை 6 மணியளவில் சாண்முக சாலை தாம்பரத்தில் 1000த்திற்கும் மேலனா கல்லுரிமாணவர் தங்களை எழுச்சித்தமிழர் முன்னிலையில் விடுதலைச்சிறுத்தைகளாய் இணைத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியை மாவட்டச்செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார்.
ஏப்ரல்-14-இல் விடுதலைச்சிறுத்தைகளின் விருதுகள்
தமிழ்ச்சமுகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் உழன்று கொண்டிருக்கும் உழைக்கும் மக்களின் உயர்வுக்காக ஓயாது உழைத்த உத்தமர்களின் புரட்சியாளர் அம்பேத்கர்,தந்தை பெரியார்,அயோத்திதாசப்பண்டிதர்,
பெருந்தலைவர் காமராசர்,கண்ணியத்தமிழர் காயிதேமில்லத்,அகியோரின் வழியில் அரும்பணியாற்றும் ஆன்றோர்-சான்றோருக்கு விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கடந்த 2007 ஆண்டு முதல்`பொற்கிழியுடன் கூடிய விருதுகள்` வழங்கிச்சிறப்பித்து
வருகிறோம்.இந்த ஆண்டுக்கான விருதுகள் பின்வரும் சான்றொருக்கு,
எதிர்வரும் ஏப்ரல்-14,புரட்சியாளர் அம்பேத்கார் பிறந்தநாளில்,மறைமலை நகரில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கிப் பாராட்டுவதில் பெருமைப்படுகிறோம்.
சான்றோர்-விருதுகள்-பட்டியல்
1.மாண்புமிகு முதல்வர் தலைவர் கலைஞர்-(அம்பேத்கர் சுடர்)
2.தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி-(பெரியாள் ஒளி)
3.திருமதி.கிருக்ஷ்ணம்மாள் ஜெகநாதந்-(காமராசர் கதிர்)
4.மொழிஞாயிறு தேவநேயப் பாவணார்-(செம்மொழி ஞாயிறு)
5.கவிக்கோஅப்துல்ரகுமாந்-(காயிதே மில்லத் பிறை)
6.திருமிகு.ஞான அலாய்சியஸ்-(அயோத்திதாசர் ஆதவன்)
நெல்லையை கலக்கிய சிறுத்தைகளின் மகளிர் உரிமை மாநாடு
8-3-2010 அன்று மாலை பாளை-சவகர் திடல்,மீனாம்பாள் அரங்கம் நெல்லை பிற்பகல் 2 மணியளவில் மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது.முன்னதாக இயக்க கொடி ஏற்றப்பட்டது.நெல்லை மாநகர் செயலாளர் அமுதா வரேற்புரை நிகழ்த்தினார்.மாநாட்டில் எழுச்சித்தமிழர் 29 திர்மானங்களை நிறைவேற்றினார்.மாநாட்டில் வெளியீட்டு அரங்கம் சார்பாக `பிடாரி`
`அண்ணலின் பெண்ணியச்சிந்தனைகள்` `மீனாம்பாள் உரை`
`மகளிர் விடுதலை இயக்க அரசியல் அறிக்கை` வெளியீடப்பட்டது.இறுதியில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.
உழைக்கும் மகளிரை ஒருங்கிணைப்போம்!-நம்மை ஒடுக்கும் கருத்தியலை வேரறுப்போம்!
உலகில் உள்ள மகளிர் அனைவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் இனிய மகளிர் தினா வாழ்த்துக்கள்.

பென்னாகரம் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் எழுச்சித்தமிழர்
5-3-2010 அன்று மாலை6மணியளவில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பி.என்.பி.இன்பசேகரன் அறிமுகக் கூட்டத்தில் எழுச்சித்தமிழர் கலந்து கொண்டு வேட்பாளரை அதரித்து பேசினார்
“ஏழை எளிய மக்களின் குடிசைகளுக்கு நெருப்பு வைத்துள்ளது மத்திய அரசு” பெட்ரோல்,டிசல் விலை உயர்வை திரும்ப்பெற வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித்தமிழர் முழக்கம்!
பெட்ரோல்,டிசல் விலை உயர்வை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கடந்த 5.3.2010 அன்று காலை 11 மணியளவில் அரசு பொது மருத்துவமனை எதிரில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.
மாவட்டச்செயலாளர்கள் வீரமுத்து,கபிலன்,இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர்.மத்திய அரசைக் கண்டித்து சிறுத்தைகள் முழக்கமிட்டபின்னர்,எழுச்சித்தமிழர் கண்டன உரையாற்றினார்.அப்போது அவர்பேசும்போது,பெட்ரோல்,டிசல் விலை உயர்வால்”ஏழை-எளிய மக்களின் குடிசைகளுக்கு நெருப்பை பற்ற வைத்திருக்கிறது மத்திய அரசு.பெட்ரோல்,டிசல் விலையை உயர்தியத்தியதன் மூலம் சாதாரண மக்களின் குடும்பம் மீது பாறாங்கல்லை உருட்டி விட்டுள்ளது.சாதாரண கத்திரிக்காய்கூட இப்போது வாங்கமுடியாத அளவு விலையாகிவிட்டது.இதற்கு காரணம்.பெட்ரோல்,டிசல் விலை உயர்வு தான் வரப்புயர நீர் உயரும்,நீர் உயர நெல் உயரும்,நெல் உயர குடிஉயரும்,குடிஉயரகோன் உயரும்.என்று சங்க இலக்கியப் பாடல் ஒன்று உள்ளது.அதைப்போல பெட்ரோல்,டிசல் விலை உயர்ந்ததால் அனைத்துப் பொருட்களுமே விலை உயர்ந்துவிட்டது.
இதனால் சாதாரண ஏழை-எளிய மக்கள்தான் மிகவும் பாதிப்புக்குள்ளாவார்கள்.ஆகவே, மன்மோகன்சிங் அரசு உடனடியாக பெட்ரோல்,டிசல் விலையை திரும்பப்பெற வேண்டும் இவ்வாறு பேசினார்.
2011-விடுதலைச்சிறுத்தைகள் ஆண்டு மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம்
28-02-2010 மாலை6மணியளவில் 2011-விடுதலைச்சிறுத்தைகள் ஆண்டு மாபெரும் விளக்கப் பொதுக்கூட்டம் காரைக்காலில் நகராட்சியில் நடைப்பெற்றது இதில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.






புரட்சிப் பாவலர் தமிழ்ஒளி பேரவை நடத்தும் கொற்றவை காலாண்டு இதழ் வெளியீட்டு விழா
இடம்:கோகலே அரங்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
நாள்:28-02-2010 காலை10.00மணிக்கு
வரவேற்புரை:முனைவர் செல்ல.பாலு
தலைமை:முனைவர் துரை.அசோகன்
முன்னிலை:சு.திருமாறன்
வெளியிடுபவர்:எழுச்சிக்கவிஞர்.அறிவர் தொல்.திருமாவளவன்
பெற்றுக்கொள்பவர்:திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன்
கருத்துரை:இளையகம்பன்,இளஞ்சேகுவேரா
வாழ்த்துரை:உஞ்சைஅரசன்,செல்வநம்பி,சீனிவாசன்,பி.ஆர்.இரவிசங்கர்
பி.விஜயராணி,முடிகொண்டான்,தி.குமார்,
மு.சச்சிதானந்தம்
எற்புரை:வெண்ணிலவன்
நன்றியுரை:ந.வெண்ணிலா
நிகழ்ச்சித் தொகுப்பு:தயாளன்










புரட்சிப் பாவலர் தமிழ்ஒளி பேரவை நடத்தும் கொற்றவை காலாண்டு இதழ் வெளியீட்டு விழா
இடம்:கோகலே அரங்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
நாள்:28-02-2010 காலை10.00மணிக்கு
வரவேற்புரை:முனைவர் செல்ல.பாலு
தலைமை:முனைவர் துரை.அசோகன்
முன்னிலை:சு.திருமாறன்
வெளியிடுபவர்:எழுச்சிக்கவிஞர்.அறிவர் தொல்.திருமாவளவன்
பெற்றுக்கொள்பவர்:திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன்
கருத்துரை:இளையகம்பன்,இளஞ்சேகுவேரா
வாழ்த்துரை:உஞ்சைஅரசன்,செல்வநம்பி,சீனிவாசன்,பி.
சிதம்பரம் நகராட்சியில் சுகாதார வளாகம் மற்றும் சமுதாய கூடம் திறப்பு விழா
28-02-2010 பிற்பகல் 2மணியளவில் சிதம்பரம் நகராட்சி உள்ள 1வது-வார்டு சிவசண்முகம் தெருவில் சுகாதார வளாகம் மற்றும் சமுதாய கூடம் சிதம்பரம் நாடளுமன்ற உறுப்பினார் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் திறந்துவைத்தார்.இந்நிகழ்ச்சியை நகர் மன்ற உறுப்பினர் வீரா.இராஜா மான்சிங் தலைமை தாங்கினார்.









]

சிதம்பரத்தில் நாடளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு
28-02-2010 அன்று காலை 10 மணியளவில் சிதம்பரத்தில் நாடளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை சிதம்பரம் தொகுதி நாடளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் திறந்துவைத்தார்.











தணிகைசெல்வன் நூல்கள் வெளியீட்டு விழா
27-10-2010 அன்று மாலை5மணியளவில் தாய்மண் வெளியீட்டகம் சார்பில் தணிகைசெல்வன் நூல்களை எழுச்சித்தமிழர்தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்டார்.















தாய்மண் அறக்கட்டளை சார்பாக கண் மருத்துவமனை திறப்பு
27-02-2010 அன்று காலை10மணியளவில் தாய் மண் அலுவலகத்தில் கண் மருத்துவமனையை எழுச்சித்தமிழர்தொல்.திருமாவளவன் அவர்கள் திறந்து வைத்தார்.











தென்கரைக்கோட்டையில் இஸ்லாமிய சமூக மக்கள் விடுதலைச் சிறுதைகள் கட்சியில் இனணயும் விழா மற்றும் கொடியேற்று விழா
24.02.2010 அன்று புதன்கிழமை மதியம் தென்கரைக்கோட்டையில் இஸ்லாமிய சமூக மக்கள் விடுதலைச் சிறுதைகள் கட்சியில் இனணயும் விழா மற்றும் கொடியேற்று விழா நடைப்பெற்றது.இதில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியை கட்சியின் மாவட்ட செயலாளர் தகடூர்மா.தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.
அம்பேத்கார் மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழா
தேதி:24-02-2010
இடம்:கொளம்பட்டி
தலைமை:சி.க.சாக்கன் திருமா
முன்னிலை:பாரதிராசா,முத்தரசன்,கே.பி.குமார்,செந்தில்,வி.பி.மோகன்
வரவேற்புரை:வே.அழகரசன்
சிலை திறப்பாளர்:டாக்டர் எழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன்
மணி மண்டபம் திறப்பாளர்:P.V.கரியமால்
சிறப்புரை:தகடூர் மா.தமிழ்ச்செல்வன்,பொ.மு.நந்தன்,மின்னல்சக்தி,
சி.கோவேந்தன்,தேவகலையழகன்,சசிகணேசன்,
கோட்டை.கலைவாணன்,ராமலிங்கம்,அசோகன்,
சுதாமுருகன்.
நன்றியுரை:K.சிவாஜி
W.R.வரதராஜன் உடலுக்கு எழுச்சித்தமிழர் அஞ்சலி
23.02.2010 அன்று மார்கிஸ்ட் கட்சி முன்னனி தலைவரான W.R.வரதராஜன் உடலுக்கு எழுச்சித்தமிழர் அஞ்சலி செலுத்தினார்
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலை போராட்டம்
23.02.2010 அன்று செவ்வாய்கிழமை சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரில் தமிழ்நாடு இளநிலை,முதுநிலை,பட்டதாரிகள் சங்கம் சார்பில் தமிழக அரசு அறிவித்த பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தை விரைவுபடுத்த கோரி மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலை போராட்டம் நடத்தப்பட்டது.இதில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்
ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் தமிழக முதல்வர் கலைஞருக்கு “அம்பேத்கர் சுடர்’ விருது
ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் தமிழக முதல்வர் கலைஞருக்கு “அம்பேத்கர் சுடர்’ விருது
தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களை 19-02-2010 மாலை 5 மணியளவில் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தோம். “தாட்கோ’ மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ததற்காகவும், ஏழை எளிய மக்கள் பயன்படக்கூடிய வகையில் “கலைஞர் வீட்டுவசதித் திட்டம்’ என்கிற பெயரில் 21 லட்சம் காரை வீடுகள் கட்டுவதற்கான அறிவிப்புச் செய்ததற்கும், அரசுப் புறம்போக்கு நிலத்தில் மூன்றாண்டுகளாகக் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிட ஆணை பிறப்பித்ததற்காகவும், மாண்புமிகு முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம்.

ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளின் அவலங்க்ளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
20.02.2010 ஆதிதிராவிட நலத்துறை விடுதிகளின் அவலங்க்ளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம். எழுச்சித் தமிழர் கண்டன உரை ஆற்றினார். தலைமை கோ. இளங்கோ. முன்னிலை வீரமுத்து, இளஞ்செழியன் ம.கபிலன்.ஒருகிணைப்பு தயா. நெபோலியன் இரா. சிவகுமார் கு.எழில் மாறன் லிங்கேஸ்வரன். சிற்ப்பு அழைப்பாளர்கள் ப.ரவிச்சந்திரன், கௌதம்சன்னா, இள்ஞ்சேகுவரா, வன்னிஅரசு, அரிவமுதன் சூம்.ம.எழில் இமயன், இரா.செல்வம், பசுமைவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள்.

எழுச்சித் தமிழர் ஸ்டண்டு நடிகர் ஜாக்குவார் தங்கம் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
20.1.2010 எழுச்சித் தமிழர் ஸ்டண்டு நடிகர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் வீட்டிற்க்கு சென்று ஆறுதல் கூறினார் உடன் வன்னிஅரசு ,
இளஞ் சேகுவேரா ,சூம்.ம. எழில் இமயன் இருந்தனர்

அஜீத், ரஜீனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்
ஜாக்குவார் தங்கம் வீடு மீது தாக்குதல் நடிகர்கள் அஜீத், ரஜினிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம் தொல். திருமாவளவன் அறிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஜாக்குவார் தங்கம் அவர்களின் மனைவி காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இந்த வன்முறையை நடத்தியுள்ளது. அண்மையில் தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் நடிகர் அஜீத் இத்தகைய விழாவுக்கு வரும்படி சிலர் மிரட்டுகின்றனர் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசினார். அவ்வாறு அஜீத் பேசியதற்கு ஜாக்குவார் தங்கம் தம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதற்காக அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்
18.2.2010 திருவள்ளுர் மாவட்டத்தில் உறுபிணர் சேயர்க்கை படிவம் மற்றும் பணம் எழுச்சி தமிழர்யிடம் வழங்கப்பட்டது.
18.2.2010 திருவள்ளுர் மாவட்டத்தில் உறுபிணர் சேயர்க்கை படிவம் மற்றும் பணம் எழுச்சி தமிழர்யிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவ்ட்ட செயலாளர் அ. பாலசிங்கம் தலைமையில் நடந்தது மற்றும் நீலவானத்து நில்வன், கொளதம சன்னா, பூவை வல்லரசு, கி.மு. திராவிடமணி, ஒரகடம் குமணன், மீஞ்சூர் செந்தில்குமார், மற்றும் விடுதலைச் சிறுத்தைகள்.











18.2.2010 திருவள்ளுர் மாவட்டத்தில் இராமாபுரம் பூங்காவனத்தம்மன் கோயில் வணிகர் அணி கொடி ஏற்று விழா
18.2.2010 திருவள்ளுர் மாவட்டத்தில் இராமாபுரம் பூங்காவனத்தம்மன் கோயில் வணிகர் அணி கொடி ஏற்று விழா மற்றும் முகாம் கல்வெட்டு திறப்பு விழா, திருமண விழா, இல்ல திறப்பு விழாவில் எழுச்சித் தமிழர் கலந்துக் கொண்டார்.


































இளையராஜாக்கு எழுச்சித்தமிழர் வாழ்த்து
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு சமிபத்தில் இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான “பத்மபூஷன்” வழங்கபட்டது.
இந்நிலையில் விருது பெற்ற இசைஞானி இளையராஜா அவர்களை தொல். திருமாவளவன் அவர்கள் நேரில் சந்தித்து பேசினார்.இதை முதல் சந்திப்பு என தெரிவித்தார்.



முத்தமிழ் மன்றம் தமிழ்ப்புத்தாண்டு விழா
14.2.2010 அன்று முத்தமிழ் மன்றம் சார்பாக தமிழ்ப்புத்தாண்டு விழா கொண்டப்பட்டது இதில் எழுச்சித்தமிழர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
இணைப்புவிழா
14.2.2010 காங்கிரஸ் கட்சியின் முன்னனி நிர்வாகிகள் எழுச்சித்தமிழர் முன்னிலையில் விடுதலைச்சிறுத்தைகளாய் இனைந்தனார்.
தமிழன் தொலைக்காட்சி ஆண்டுவிழா
14.2.2010 அன்று தமிழன் தொலைக்காட்சியின் 8ம்ஆண்டுவிழா மற்றும் கட்சியின் மாநில பொதுச்செயலாளருமான கா.கலைகொட்டுதயம் பிறந்தநாள் விழாவும் கொண்டப்பட்டது இதில் எழுச்சித்தமிழர் கலந்துக்கொண்டு வாழ்த்தினார்.
தமிழகத்தில் கரும்புலி முத்துக்குமார் பாசறை தொடக்கம்
ஈழத்தில் விடுதலைபுலிகளின் கரும்புலிகள் இருப்பதுப்போல தமிழகத்தில் கரும்புலிமுத்துக்குமார் பாசறை விடுதலைச்சிறுத்தைகள் சார்பாக தொடங்கப்படுகிறது.

கரும்புலி முத்துகுமார் குடும்பத்துக்கு நிதியுதவி
13.02.2010 அன்று காலை 10 மணியளவில் ஈழவிடுதலைபோரில் தமிழகத்தில் ஊயிர் நித்த கரும்புலி முத்துகுமார் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ருபாய் 2 லட்சருபாய்கான காசோலையை முத்துக்குமாரின் சகோதரி தமிழரசியிடம் எழுச்சித்தமிழர் வழங்கினார்.
MRL SC/ST யூனியன் ஊழியர்களின் 36வது ஆண்டு நிறைவு விழா
07.02.2010 அன்று காலை 9 மணியளவில் MRL SC/ST யூனியன் ஊழியர்களின் 36வது ஆண்டு நிறைவு விழா இதில் எழுச்சித்தமிழர் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் தாய் மண் டிரஸ்ட்க்கு ஒரு லட்சருபாய் காசோலை வழங்கப்பட்டது.
பல்லவா தொடக்கப்பள்ளி 38வது ஆண்டு விழா நடைப்பெற்றது
6.2.2010 மாலை7மணியளவில் பல்லவா தொடக்கப்பள்ளி 38வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைப்பெற்றது இதில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார் இறுதி பள்ளி நிர்வாகத்தின சார்பக எழுச்சித்தமிழருக்கு நினைவு பரிசாக கம்ப்யூட்டர்
வழ்ங்கப்பட்டது.
”அம்பேத்கார் ஒரு பெளத்த தத்துவம்” குறும் படம் வெளியீட்டு விழா
6-2-2010 அன்று மாலை 6 மணியளவில் சாந்தோம் கமியுனிகேசன் சென்டரில் குறும்பட இயக்குநர் பாக்கியராஜ் தொகுத்த ”அம்பேத்கார் ஒரு பெளத்த தத்துவம்” குறும் படத்தை எழுச்சித்தமிழர்தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்டார்,இந்த நிகழ்ச்சியை விடுதலைசிறுத்தைகள்கட்சியின் செய்திதொடர்புமையம் மாநில செயலாளர் ம.தா.பொன்னரசு நிகழ்ச்சியை ஒருங்கினைத்தார்.இதில் ஆர்வலன்,எழில்இமயன்,பொன்னிவளவன்,கிட்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சனவரி-29 கரும்புலி முத்துக்குமார் நினைவு நாள் பொதுகூட்டம்
சனவரி29 தங்க சாலையில் முத்துக்குமார் நினைவு நாளில் ஈழவிடுதலை-தமிழக போராளிகளுக்கு வீர வணக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது இந்நிகழ்ச்சியை தமிழகத்தில் உயிர் நித்த போரளிகளுக்களின் குடும்பத்தினர்களுக்கு விடுதலை சிறுத்தைகளின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது மற்றும் 15-1-2009 அன்று எழுச்சித்தமிழரின் உண்ணாவிரத்ததின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட 26 பேருக்கு நினைவு சானறிதழ் வழங்கப்பட்டது இறுதியில் எழுச்சித்தமிழர்தொல்.திருமாவளவன் அவர்கள் வீர வணக்கவுரை நிகழ்த்தினார்.
நெமிலிசி.கோமகன் அவர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் வீரவணக்கம்
திருபெரும்பத்தூர் ஒன்றிய கவுன்சிலரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளருமான நெமிலிசி.கோமகன் 26.1.2010 அன்று சமுக விரோதிகளினால் படுகொலை செய்யபட்டார்
அவரின்இறுதிசடங்கில்எழுச்சிதமிழர்தொல்.திருமாவளவன்,
சூ.க.விடுதலைசெழியன்,வன்னிஅரசு,பாவாரசு,வல்லரசு,நிலவனத்துநிலவன்,கெளதம்சன்னா,சேகுவாரா,பார்வேந்தன்,
ச.வெற்றிச்செல்வன்,சூம்.ம.எழில்இமயன் மற்றும் எரமளான விடுதலை சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் மொழிபோர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம்
25.1.2010 அன்று மீஞ்சுர்வே.செந்தில்குமார் தலைமையில் முப்பெரும் விழா,மொழிபோர் தியாகிகள் நினைவுதினம்,எழுச்சித்தமிழருக்கு பாரட்டு விழா மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சிறுத்தைகளாய் இனைப்பு விழா நடைப்பெற்றது.அதில் எழுச்சி தமிழர் அவர்கள் கலந்து சிறப்புரை ஆற்றினார்.
அம்பேத்கரின் புரட்சி இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைப்பு வீழா
25.1.2010 அன்று பிற்பகல் 1 மணியளவில் அம்பேத்கார் புரட்சி இயக்கத்தை சேர்ந்தவர்கள் விடுதலை சிறுத்தைகளாய் இணைந்தனார
தலைமை:வன்னிஅரசு
முன்னிலை:ந.இளங்செழியன்,ஆ.விடுதலைசெல்வன்
வரவேற்புரை:து.கா.பகலவன்
வாழ்த்துரை:ஏழுச்சித்தமிழர்தொல்.திருமாவளவன்
ஏற்ப்புரை:மயிலை ரமேஷ்குமார்
நன்றியுரை:பா.தயாளன்
தலித் சமூகம் தான் தமிழ்மொழியை பாதுகாத்துகொண்டிருக்கிறார்கள்_எழுச்சித்தமிழர்
சனவரி 25 ஆம் நாள் ஆண்டுதோறும் தாய்மொழி காத்த மொழிபோர் தியாகிகளுக்கு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சென்னை மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிபோர் தியாகிகள் நடராசன் ,தாளமுத்து அவர்களின் நினைவிடத்தில் காலை 10 மணிக்கு எழுச்சித்தமிழர் அவர்கள் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் எழுச்சித்தமிழரை பார்த்து கைகுலுக்கி எழுச்சியோடு வரவேற்றனர்.சென்னையில் காலை 11 மணிக்கு விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள அரங்கநாதன் அவர்களின் மணிமண்டபத்தில் எழுச்சித்தமிழர் அவர்கள் மலர்வளையம் வைத்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொண்டர்களோடு வீரவணக்கம் செலுத்தினார்.
20.1.10 அன்று அவடி நடந்த பொது கூட்டத்தில் எழுச்சித்தமிழர்
20.1.10 அன்று அவடி நடந்த பொது கூட்டத்தில் எழுச்சித்தமிழர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
class=”aligncenter size-full wp-image-766″ />
மறைமலைநகரில் உண்ணாவிரத போரட்டம்
15.01.2010 அன்று மறைமலைநகரில் இராணுவ கட்டுப்பாட்டில் சிக்கிதவிக்கும் ஈழத்தமிழ் சொந்தகளின் கண்ணீர் துடைக்க ஒரு நாள் அடையாள ஊண்ணா நிலை போரட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக நடைபெற்றது நிகழ்ச்சியின் முடிவில் எழுச்சித்தமிழர் அவர்கள் கலந்து கொண்டு கன்டன ஊரை நிகழ்த்தி பழச்சாறு கொடுத்து உண்ணாநிலை போரட்டத்தை முடித்து வைத்தார்.
முன்னிலை:சூ.க.விடுதலைசெழியன்
தலைமை:கேது.தென்னவன்
வரவேற்புரை:பூவிழி,இளையவளவன்,கலைவடிவன்,மானிக்கவேந்தன்,
காரத்தேபாண்டியன்,மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈழ மண்ணில் படிந்த இரத்தக்கறை இன்னும் காயவில்லை! பொங்கல் கொண்டாடுவதைத் தவிர்ப்போம்! – எழுச்சித்தமிழர் அறிவிப்பு
வழக்கம்போல இந்த ஆண்டும் தை பிறந்து விட்டது. பொங்கல் திருநாளும் வந்துவிட்டது. தமிழகமெங்கும் தமிழ் மக்கள் பொங்கல் விழாவைக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். தமிழர்களுக்கென்று இருக்கிற ஒரே பண்டிகை தமிழர் திருநாளாம் பொங்கல் விழாதான்.
அதிலும் கடந்த ஆண்டிலிருந்து தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு நாளாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் தமிழர்கள் கொண்டாட வேண்டியது இயல்பானதுதான். ஆனால், நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் லட்சக்கணக்கானோர் சிங்கள இராணுவ வதை முகாம்களில் அடைபட்டு சொல்லாணாத் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த ஆண்டில் இதே நாள்களில்தான் முல்லைத் தீவுப் பகுதிகளில் எமது ஈழத் தமிழ்ச் சொந்தங்களை ஈவிரக்கமற்ற முறையில் கொத்துக்கொத்தாய்ப் படுகொலை செய்தது சிங்கள இனவெறி அரசு. சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும், போராளிகளும், வெள்ளைக்கொடியேந்தி வந்த தலைவர்களும் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்டனர்.
அந்த இரத்தக் கறை இன்னும் ஈழமண்ணில் காயவில்லை. இந்தக் கொடுமைகளைக் கண்டித்து சனவரி 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் உண்ணாநிலை அறப்போரை மறைமலைநகரில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்தினோம். அத்தகைய துக்கமும் துயரமும் நம் நெஞ்சைவிட்டு அகலாத நிலையில், இந்த ஆண்டில் கடந்த சனவரி 6ஆம் தேதி அன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திரு. வேலுப்பிள்ளை அவர்கள் சிங்கள இராணுவ முகாமில் திடீரெனக் காலமாகிவிட்டார்.
பல இலட்சக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் சொந்த பந்தங்களை பலிகொடுத்து, துக்கத்தில் விழுந்து கிடக்கின்ற நிலையிலும், திரு. வேலுப்பிள்ளை அவர்களை இழந்து வாடும் நிலையிலும், நமது இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டு பொங்கல் கொண்டாடுவதை தமிழக மக்கள் தவிர்க்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள், அவர்தம் குடும்பத்தினர் கட்டாயம் புத்தாடை அணிவது, பொங்கலிடுவது, விழாக் கொண்டாட்டங்களை நடத்துவது போன்றவற்றை தவிர்த்துத் துக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
(தொல். திருமாவளவன்)
தேசியதலைவரின் தாயருடன் எழுச்சித்தமிழர்
தேசியதலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தாயார் திரு.பார்வதி அம்மாள் அவர்களை எழுச்சித்தமிழர் சந்தித்து அறுதல் கூறினார்.





மாவீரர் வேலுபிள்ளை அவர்களுக்கு எழுச்சித்தமிழர் இறுதி அஞ்சலி செலுத்தினார்
நமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திரு.வேலுபிள்ளை அவர்கள் 07.01.2010 அன்று காலை காலமானார், இறுதி ஊர்வலத்தில் எழுச்சித்தமிழர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்.



மாவீரர் வேலுபிள்ளை அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்
நமது தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திரு.வேலுபிள்ளை 07.01.2010 அன்று காலை காலமானார், இறுதி ஊர்வலத்தில் எழுச்
தென்னிந்திய சின்னத்திரை துனை நடிகர்கள் சஙகம் தொழிலாளர் விடுதலை முன்னணியில் இனணப்பு விழா மற்றும் பொங்கல் தமிழ் புத்தாண்டு விழா
நாள்:10.01.2010,ஞாயிற்றுக்கிழமை, நேரம்:மாலை2மணி இடம்.கோல்டன் பேரடைஸ் திருமண மண்டபம்,சாலிகிராமம் சென்னை
தலைமை:கே.வி.ராகவன்
முன்னிலை:முனைவர்சு.மாகதேவன்,வா.வனச்செழியன்,கோயம்பேடுஇரவி,அ.வீரமணி
வரவேற்புரை:இரா.மல்லிகையரசி,என்.மதியழகன்,டி.கிரிராஜ்,கே.வி.பாரதி
பெயர் பலகை திறந்து சிறப்புரை:க.கலைகோட்டுதயம்,முகமதுயுசப்,வன்னிஅரசு
தேசியத் தலைவர் மாவீரர் பிரபாகரனின் தந்தை காலமானார் – விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வீரவணக்கம் செலுத்த எழுச்சித்தமிழர் இலங்கை பயணம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் தந்தையாரான வேலுப்பிள்ளை அவர்கள் காலமானதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இராணுவ காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் நேற்று இரவு காலமானதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தமது 86 வது வயதில் நேற்று காலமானதாக பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இயற்கையாக உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேசாளார் உறுதி செய்துள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற இறுதிக் கட்ட மோதல்களின் போது மோதல் வலயத்திலிருந்து இரானுவத்தினரிடம் சரணடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கபபட்டிருந்தனர்.
இதனையடுத்து மேலதிக விசாரணகளுக்காக இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தந்தை வெலுபிள்ளை அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எழுச்சித்தமிழர் அவர்கள் 8/1/2010 நாளை காலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் இலங்கை செல்கிறார்.
எழுச்சித்தமிழர் அவர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தோழர்களும்,அனைத்து புலம்பெயர்ந்த தமிழர்களும் தந்தை வேலுப்பிள்ளை அவர்களின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தவேண்டும் என அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு வீரவணக்கம்
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திரு. வேலுப்பிள்ளை அவர்கள் இன்று காலையில் காலமாகிவிட்டார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது. ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஈடுஇணையற்ற மாவீரரை, மகத்தான தலைவரை ஈன்று புறம்தந்த பெருமைக்குரியவர் திரு. வேலுப்பிள்ளை அவர்கள். அவருடைய மரணம் இயற்கையானது என்று சொல்லப்பட்டாலும் அதுவும் ஒரு வீரச்சாவே ஆகும். தள்ளாத வயதிலும் தாய்மண்ணைவிட்டுப் பிரியாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் களமாடும் வீரம் செறிந்த அந்த ஈழ மண்ணில் புலிகளுக்கு ஊக்கமளித்துவந்த ஒரு மாவீரராகவே அவர் வாழ்ந்தார். திரு. பிரபாகரன் அவர்களின் உணர்வுகளுக்கும் விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளுக்கும் இளம்பருவத்திலிருந்தே ஊக்கமளித்து வந்தவர் என்பதற்கு அவருடைய வாழ்க்கை ஒரு சாட்சியமாகவே விளங்குகிறது.
சிங்கள இனவெறியர்களின் வதைமுகாமில் சிக்கி தமது வாழ்வை நிறைவு செய்ததன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தில் அவரும் ஒரு மகத்தான வரலாறாகப் பதிவாகியிருக்கிறார். ஈவிரக்கமற்ற இனவெறிக் கும்பல் மேதகு பிரபாகரன் அவர்களின் வயதுமுதிர்ந்த தாய், தந்தை மற்றும் மாமியார் ஆகியோரையும் சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தி வரும் நிலையில் இந்த மூவரையுமாவது விடுவிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் சிங்கள ஆட்சியாளர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லையயன்பது பெரும் வேதனையளிக்கிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் குழுவோடு நான் இலங்கை சென்றிருந்தபோதும், அண்மையில் மறைந்த அமைச்சர் சந்திரசேகர் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கொழும்பு சென்றிருந்தபோதும், பசில் இராஜபக்சேவிடம் அந்த மூவரையும் விடுவிக்க வேண்டும் என முறையிட்டேன். அப்போது குடும்ப உறவினர்கள் விண்ணப்பித்தால் அவர்களை விடுவிக்க முடியும் என்று பசில் பதிலளித்தார். கனடாவில் உள்ள மேதகு பிரபாகரன் அவர்களின் தமக்கையின் மூலமாக அம்முயற்சியை மேற்கொண்டிருந்த இவ்வேளையில் திடீரென திரு. வேலுப்பிள்ளை அவர்கள் காலமாகிவிட்டார் என்பதைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. ஒப்புவமை இல்லாத ஒரு மாபெரும் விடுதலை இயக்கத் தலைவரை தமிழினத்துக்குத் தந்த மாவீரர் திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். அவருடைய குடும்ப உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
33வது புத்தக கண்காட்சி முள்வலி வாசகர்களுடன் எழுச்சித்தமிழர்
07.01.2010 அன்று மாலை 6 மணியளவில் எழுச்சித் தமிழர் புத்தக கண்காட்சியை பார்வையிட்டார், தாய் மண் வெளியீட்டகம்,விகடன் பிரசுரம் பார்வையிட்டார்,அப்போது வாசகர்கள் எழுச்சித் தமிழரிடம் கையழுத்து பெற்றார்கள்.










































































